ஆன்மிகம்
பிள்ளையார்புரம் தென்குமரி ஆதிமூல விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

தென்குமரி ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2019-09-13 04:18 GMT   |   Update On 2019-09-13 04:18 GMT
பிள்ளையார்புரம் தென்குமரி ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் தென்குமரி ஆதிமூல விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

விழாவுக்கு சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார், செயலாளர் ராஜன், தென்குமரி கல்வி கழக செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் நாராயணராஜா, ஸ்ரீவைகுண்டர் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் வெற்றிவேலன், செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் கருணானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்டின் எம்.எல்.ஏ., டாக்டர் தெய்வபிரகாஷ், ராஜகோபால் மற்றும் வக்கீல்கள் மகேஷ், ஜெயச்சந்திரன், முன்னாள் பொருளாளர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மதியம் 12 மணிக்கு அன்னதானத்தை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் காமராஜ், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் பாரத்சிங் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News