செய்திகள்
தற்கொலை

ஆனைமலை அருகே திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை

Published On 2021-03-17 09:31 GMT   |   Update On 2021-03-17 09:31 GMT
ஆனைமலை அருகே திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

திண்டுக்கல் மாவட்டம் நெல்லாகோட்டையை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் சங்கீதா (வயது 23). கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது மகளின் விருப்பம் இல்லாமல் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஓடையாகுளத்தை சேர்ந்த உறவினரான மகாலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா தனது பெற்றோர் மீது கோபம் அடைந்து அவர்களுடன் பேசாமல் இருந்தார். தன்னுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்ததால் சங்கீதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 20 நாளில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News