ஆன்மிகம்
செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம்

செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம்

Published On 2021-02-05 06:51 GMT   |   Update On 2021-02-05 06:51 GMT
செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி, கும்பாலங்காரம் மற்றும் யாகசாலை பிரவேசம் செய்தல், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

நேற்று அதிகாலை கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கோமாதா பூஜை, இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு தீபாராதனையை தொடர்ந்து பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பணிக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News