செய்திகள்
தூத்துக்குடியில் பா.ஜனதா சிறுபான்மை அணி சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது எடுத்த படம்.

பா.ஜனதா சிறுபான்மை அணி சார்பில் தூத்துக்குடியில் ஏழைகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Published On 2021-02-22 15:20 GMT   |   Update On 2021-02-22 15:20 GMT
பா.ஜனதா சிறுபான்மை அணி சார்பில், தூத்துக்குடியில் ஏழைகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா சிறுபான்மை அணி சார்பில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில சிறுபான்மை அணி செயற்குழு உறுப்பினர் அசோகன் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் வக்கீல் எஸ்.பி.வாரியர், தெற்கு மாவட்ட கிராமப்புற மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் மணக்கரை ஏ.முருகன், மாவட்ட அறிவுஜீவி அணி அமைப்பு செயலாளர் நாட்டாண்மை எம்.கே.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் கோவை ஜோசப் ஜான்சன் வரவேறு பேசினார்.

மாநில சிறுபான்மை அணி தலைவர் ஆசிம் பாஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 500 பெண்களுக்கு சேலை, 25 பேருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாநில சிறுபான்மை அணி துணைத்தலைவர்கள் பிரவின்பால், ஜான்சன், மாநில சிறுபான்மை அணி செயலாளர்கள் கல்வாரி தியாகராஜன், சதிஸ்ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் பால்ராஜ், மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜகண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மல்கான், மாவட்ட தலைவர்கள் ராமநாதபுரம் அப்துல்லா, விருதுநகர் தாஸ்வின், சிவகங்கை பீட்டர் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஜெயம் செல்வராஜ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News