செய்திகள்
கூட்டத்தில் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., பேசிய காட்சி.

அ.தி.மு.க. சார்பில் கணியூரில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

Published On 2021-11-23 08:39 GMT   |   Update On 2021-11-23 08:39 GMT
கணியூர் பேரூராட்சி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் திறந்து வைத்தார்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட  அ.தி.மு.க. செயலாளருமான சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் கணியூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

மேலும் கணியூர் பேரூராட்சி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.காளீஸ்வரன், பேரூராட்சி  பொறுப்பாளர் சரவணன், அவைத்தலைவர் தம்பிதுரை, ஊராட்சிமன்ற தலைவர்கள் வேடபட்டி துர்க்கைவேல், ஜோத்தம்பட்டி செந்தில், சோழமாதேவி சாகுல் அமீது, உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News