செய்திகள்
கோப்புபடம்

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2020-09-24 07:49 GMT   |   Update On 2020-09-24 07:49 GMT
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே சங்கமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த கந்தன் (வயது41), பழையனூர் மேல்பாதியை சேர்ந்த சத்தியராஜ் (35), சங்கமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கசாமி (47) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News