ஆன்மிகம்
அய்யம்பாளையம் உத்தமராயபெருமாள் கோவிலில் தைமகர உற்சவ விழா

அய்யம்பாளையம் உத்தமராயபெருமாள் கோவிலில் தைமகர உற்சவ விழா

Published On 2021-01-18 05:56 GMT   |   Update On 2021-01-18 05:56 GMT
கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயபெருமாள் கோவிலில் தைமகர உற்சவ விழா நடைபெற்றது.
கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயபெருமாள் கோவிலில் நேற்று தைமகர உற்சவ விழா நடைபெற்றது.

விழாவையொட்டி சாமிக்கு திருமஞ்சன அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வசதிக்காக ஸ்ரீதேவி பூதேவி சமேத உத்தமராயபெருமாள் மலையடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் நடராஜன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News