செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

பெருந்துறை அருகே தனியார் பஸ் மோதி நிலப்புரோக்கர் பலி

Published On 2019-12-04 10:43 GMT   |   Update On 2019-12-04 10:43 GMT
பெருந்துறை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் நிலப்புரோக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள திருவேங்கபாளையம் புதூர் செல்லம் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60) நிலப்புரோக்கர்.

இவர் இன்று காலை 8 மணியளவில் தனது மொபட்டில் ஈரோடு ரோடு பகுதிக்கு சென்றார்.

அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தலையில் பலத்த அடிபட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News