செய்திகள்
சரண்

கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை- நீதிமன்றத்தில் சரண் அடைந்த நண்பர்

Published On 2019-11-06 07:50 GMT   |   Update On 2019-11-06 07:50 GMT
தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நண்பர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
காஞ்சிபுரம்:

தாம்பரம் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தவர் முகேஷ். நேற்று அவர் வேங்கடமங்கலத்தில் உள்ள  நண்பர் வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் முகேஷ் குண்டடி பட்டு சுருண்டு விழுந்தார்.

துப்பாக்கி சூடு நடந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் படுகாயம் அடைந்த மாணவர் முகேசை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார். இவ்விகாரத்தில் தொடர்புடைய அவரது நண்பர் விஜயை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில் தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது ஏன் முகேஷை சுட்டார்? மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News