செய்திகள்
கைது

கீழ்ப்பாக்கத்தில் சூதாட்டம்- 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது

Published On 2021-01-10 07:16 GMT   |   Update On 2021-01-10 07:16 GMT
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர் 2-வது தெருவில் பார்வதி என்பவர் வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக கிடைக்கப்பட்ட தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட நடராஜன், கர்ணன், பாபு ரெட்டி, ராஜா, சீனிவாசன், சரத்குமார், ஆரோக்கியராஜ் மற்றும் அல்போன்ஸ், சத்தியவாணி, தேவி, ஜெயபாரதி ஆகிய 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News