செய்திகள்
அஸ்வின்

இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் செல்கிறார் அஸ்வின்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2019-11-06 13:14 GMT   |   Update On 2019-11-06 13:14 GMT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குச் செல்வது உறுதியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்தார். கடந்த இரண்டு சீசனில் முதல் பாதியில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடியது. அதன்பின் சொதப்பியது. இதனால் 2020 சீசனில் அஸ்வினை வெளியேற்ற பஞ்சாப் அணி விரும்பியது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அஸ்வினை வாங்க விருப்பம் தெரிவித்தது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா அஸ்வின் பஞ்சாப் அணியில் நீடிப்பார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அஸ்வின் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இரு அணிகளுக்கு இடையில் உடன்பாடு எட்டியவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
Tags:    

Similar News