செய்திகள்
ப.சிதம்பரம்

இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் டுவிட்

Published On 2019-09-16 07:47 GMT   |   Update On 2019-09-16 08:09 GMT
பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது.

அவரை வருகிற 19-ந் தேதி வரை நிதீமன்ற காவலில் வைக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இன்று ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் பதிவிட்ட டுவிட் வருமாறு:-

பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஏற்றுமதி ஆண்டுக்கு 20 சதவீத உயர்வு என்ற அளவில் இல்லாமல் எந்த நாடும் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வளர்ச்சியை எட்ட முடியாது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 06.05 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது.

காஷ்மீர் விவகாரத்துக்கு பிறகு அரசின் கடைசி கவலையாக பொருளாதாரம் இருக்கிறது என்று பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News