ஆன்மிகம்
திருநெடுங்குளநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
திருநெடுங்குளநாதர் கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள திருநெடுங்குளநாதர் கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திரம் அன்று சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை விழா நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவில் கோவில் செயல்அதிகாரி வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவில் கோவில் செயல்அதிகாரி வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.