செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

Published On 2021-01-13 07:51 GMT   |   Update On 2021-01-13 07:51 GMT
திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கிஷோர்பாண்டி (வயது 25). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர்பாண்டியின் பெற்றோர் சென்னைக்கு சென்று விட்டனர். இதனால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். 

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோர்பாண்டி வீட்டுமுன்பு தடுமாறி விழுந்துள்ளார். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. மேலும் வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கிஷோர்பாண்டி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருடைய பெற்றோருக்கு வந்தபின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர். மேலும் இதுதொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News