செய்திகள்
சசிகலா

பொன்னாடை, நினைவு பரிசை தவிர்க்க சசிகலா வேண்டுகோள்

Published On 2021-11-06 02:10 GMT   |   Update On 2021-11-06 02:10 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே, அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்.
சென்னை :

அரசியல் களத்தில் பரபரப்பு காட்டி வரும் நபராக சசிகலா மாறிவிட்டார். அ.தி.மு.க. கொடி கட்டிய காரிலேயே வலம் வருகிறார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. என்ற இந்த பேரியக்கம் எம்.ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம்பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழிவந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், நீங்கள் வாழும் இடத்துக்கு அருகே உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டவர்கள், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே, அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News