செய்திகள்
பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்

உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? உலக நாடுகளின் தலைவர்களை திணறடித்த 16 வயது சிறுமி

Published On 2019-09-23 17:24 GMT   |   Update On 2019-09-23 17:24 GMT
ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என 16 வயது நிரம்பிய சிறுமி கேட்ட கேள்வி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவா:

அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர். 

இந்நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற கிரேட்டா தன்பெர்க் என்ற ஸ்விடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பேசியதாவது:

என்னுடைய செய்தி என்பது நாங்கள் அனைவரும் உங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அனைத்துமே தவறாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் இங்கே இருக்க கூடாது மாறாக கடலுக்கு மறுபக்கம் உள்ள எனது பள்ளியில் படித்துக்கொண்டு  இருக்க வேண்டும்.

நீங்கள் எங்களிடம் (இளைய தலைமுறையினர்) நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?

நீங்கள் என்னுடைய கனவு மற்றும் குழந்தை பருவத்தினை வெற்றுவார்த்தைகளால் திருடி விட்டீர்கள்.ஆனாலும், நான் ஒரு அதிஷ்டசாலி.  பருவநிலை மாற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். 

நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?

உலக தலைவர்களிடம் பேசும் போது இளைஞர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் பருவநிலை மாற்றம் குறித்த அவசர நிலையை புரிந்து கொள்ளமுடிகிறது என தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நான் எவ்வளவு கோபமாகவும், கவலையாகவும் இருந்தாலும் நான் அதை நம்ப தயாராக இல்லை. எனென்றால் நீங்கள் உண்மையிலேயே பருவநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால் நீங்கள் அனைவரும் மிகவும் அரக்கர்கள்.ஆனால் நீங்கள் அவ்வாறு இருப்பீர்கள் என நான் நம்பவில்லை.
  
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எந்த திட்டமும், தீர்வும் இந்த கூட்டத்தில் ஐநா சபையால் சமர்ப்பிக்கப்படவில்லை. ஏனென்றால் இன்றய நிலையில் பருவநிலை மாற்றத்தின் அளவு மிகவும் பெரியது. அதை கட்டுப்படுத்த ஐநா சபையோ அல்லது அதன் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸோ இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.

நீங்கள் எங்களை தவறவிடுகிறீர்கள். ஆனால் இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளோம்.

அடுத்த தலைமுறையின் பார்வை உங்கள் முன்தான் உள்ளது. நீங்கள் எங்களை தோல்வியடைய செய்ய நினைத்தால் நான் சொல்வேன் உங்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டோம். 

இவ்வாறு கிரேட்டா தன்பெர்க் ஆக்ரோஷமாக கூறினார்.





Tags:    

Similar News