உள்ளூர் செய்திகள்
திருநின்றவூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருநின்றவூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருநின்றவூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவர் தனக்கு பயமாக இருக்கிறது என்று கூறி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வீட்டில் இருந்தவர்கள் வீட்டின் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வேளையில் கோவிந்தராஜ் வீட்டுக்குள் மின்விசிறி ஊக்கில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் போலீசார் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.