உள்ளூர் செய்திகள்
கடன் தொல்லையால் ஓசூர் அரசுப்பள்ளி ஆசிரியர் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடன் தொல்லை காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் மாயமானார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55).பெங்கிலி அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதிகமான கடன் இருந்ததால் கடந்த சில தினங் களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த, 7 ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ராதாகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகிறார்கள்.