செய்திகள்
விபத்து பலி

வாலாஜா அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2021-11-24 20:26 GMT   |   Update On 2021-11-24 20:26 GMT
வாலாஜா அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் கிராமம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 69). இவர் கடந்த 23-ந்தேதி வீட்டின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதி அவர் பலத்த காயம் அடைந்தார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News