செய்திகள்
விபத்து பலி

மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலி

Published On 2021-05-17 13:31 GMT   |   Update On 2021-05-17 13:31 GMT
மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மோச்சேரியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 76). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மோச்சேரி என்ற இடத்தில் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றார்.

அப்போது அவர் மீது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் தள்ளிச் சென்ற சைக்கிள் அங்கே நடந்து சென்ற மோச்சேரி அடுத்த அருணாகுளத்தை சேர்ந்த வாட்ச் கடை நடத்தி வந்த வேலு (37) என்பவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த வேலுவை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News