செய்திகள்
பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா சரியான தேர்வு - அம்ரீந்தர் சிங்

Published On 2019-07-29 12:24 GMT   |   Update On 2019-07-29 12:24 GMT
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
2019 தேர்தலில் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற மறுத்து விட்டார். இந்நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ராகுல் காந்தியே அப்பதவியில் தொடரவேண்டும் என்ற கோரிக்கை நிலவுகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார். பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தால் அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைமைக்கான சரியான தேர்வாக இருக்கும், இருப்பினும் இவ்விவகாரம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை சார்ந்தது. செயற்குழுவால் மட்டுமே இவ்விஷயத்தில் ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளது என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார். 
Tags:    

Similar News