செய்திகள்
பணம் பறிப்பு

நாங்குநேரி அருகே டிரைவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறிப்பு

Published On 2021-04-17 11:49 GMT   |   Update On 2021-04-17 11:49 GMT
நாங்குநேரி அருகே டிரைவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நாகர்கோவில் வெட்டுர்னி மடம் அருகே உள்ள கேசவ திருப்பாற்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 28). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கோவையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு லாரியில் சரக்கு ஏற்றி சென்று கொண்டு இருந்தார்.

நாங்குநேரி டோல்கேட் அருகே சென்ற போது, நேரடியாக டோல்கேட்டை கடந்து செல்லாமல் அருகில் உள்ள சுற்றுச்சாலை வழியாக சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லாரியை மறித்து டிரைவர் ராஜேசை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர்.

இதுகுறித்து லாரி டிரைவர் ராஜேஸ் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News