ஆன்மிகம்
கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தள்ளிவைப்பு
தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கரிவரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெகமம் அடுத்த வடசித்தூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்த கோவில் கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை கோவில் முன்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்த கோவில் கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை கோவில் முன்பு வைக்கப்பட்டு இருக்கிறது.