செய்திகள்
சூதாட்டம்

எம்.ஜி.ஆர். நகரில் சூதாட்டம்- 5 பேர் கைது

Published On 2019-11-10 09:31 GMT   |   Update On 2019-11-10 09:31 GMT
எம்.ஜி.ஆர். நகரில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று நள்ளிரவு அண்ணா குடியிருப்பு 1-வது தெருவில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கன்னியப்பன், சிவகுமார், சேதுபதி, மகேந்திரா, இளவரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 9 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News