செய்திகள்
கொள்ளை

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2021-06-08 11:02 GMT   |   Update On 2021-06-08 11:02 GMT
மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் நகை, சமையல் சிலிண்டர் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு மெஹர் பாபா நகரைச் சேர்ந்தவர் கோமதி நாயகம். இவர் கடந்த மாதம் 21-ந் தேதி மாமனார் இறந்து விட்டதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தென்காசிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கோமதி நாயகத்தின் வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோமதி நாயகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பீரோவில் இருந்த 5 சவரன் நகை, சமையல் சிலிண்டர் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News