செய்திகள்
விராட் கோலியுடன் மந்தீப் சிங் (பழைய படம்)

மந்தீப் சிங் ‘சிங்கம் இதயம்’ கொண்டவர்: விராட் கோலி பாராட்டு

Published On 2020-10-27 10:59 GMT   |   Update On 2020-10-27 10:59 GMT
தந்தை இறந்த துக்கம் மறைவதற்குள் கொல்கத்தா அணிக்கெதிராக அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார் மந்தீப் சிங்.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மந்தீப் சிங் விளையாடி வருகிறார். இவரது தந்தை நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த 24-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடுவதற்கு முந்தைய நாள் காலமானார்.

தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்த கொள்ளாமல் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த போட்டியில் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிராக சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அவரது தைரியத்தை அனைவரும் பாராட்டினர். இந்திய அணி கேப்டனும், ஆர்சிபி கேப்டனுமான விராட் கோலி, சிங்கம் இதயம் கொண்டவர் மந்தீச் சிங் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்த பின் மந்தீச் சிங் ‘‘என்னுடைய அப்பா என்னிடம், ஒவ்வொரு போட்டியிலும் நாட்-அவுட்டாக இருக்க வேண்டும் என்று கூறினார். அது தற்போது நடந்துள்ளது. இந்த போட்டிக்கு முன் கேப்டன் ராகுலிடம் பேசினேன். அவர் என்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினார். சில பந்துகள் எடுத்துக் கொண்டாலும், அணிக்காக வெற்றியை தேடிக்கொண்டு முடிந்தது. நான் போட்டியை சிறப்பான வகையில் முடித்ததால், என்னுடைய தந்தை சந்தோசம் அடைந்திருப்பார்’’ என்றார்.
Tags:    

Similar News