செய்திகள்
கோப்பு படம்

தஞ்சை மாவட்டத்தில் 136 பேருக்கு கொரோனா

Published On 2021-04-05 15:03 GMT   |   Update On 2021-04-05 15:03 GMT
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 136 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 244 ஆக உயர்ந்தது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று தஞ்சை மாவட்டத்தில் 136 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 244 ஆக உயர்ந்தது. நேற்று 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 801 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 273 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News