செய்திகள்
தபால் வாக்கு

80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு

Published On 2021-02-26 11:30 GMT   |   Update On 2021-02-26 11:30 GMT
ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்து வரும் தலைமை தேர்தல் அதிகாரி அனில் அரோரா, 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பலகட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் இன்று ஐந்து மாநில தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அப்போது 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்ற ஐந்து பேர் மட்டுமே வாக்கு கேட்கலாம் வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் என்றார்.
Tags:    

Similar News