செய்திகள்
எருமப்பட்டியில் கொரோனா பரிசோதனை முகாம்
எருமப்பட்டி பேரூராட்சி அம்பேத்கர் நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி பேரூராட்சி அம்பேத்கர் நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இதில் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் லலிதா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மெற்கொண்டார். மேலும் காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா? என கேட்டறிந்தார். முகாமில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் தேவராஜன், தி.மு.க. இளைஞரணி தலைவர் ரசூல் மற்றும் ராஜ்குமார், ஆசைத்தம்பி, செவிலியர்கள் கலந்து கொண்டனர்.