செய்திகள்
சீமானை கைது செய்யக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
அவதூறாக பேசுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
காங்கிரஸ் தலைவர்களை அவதூறாக பேசுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொக்கிரகுளத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் காங்கிரஸ் தலைவர்களை அவதூறாக பேசிய சீமானை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சண்முகவேல், நிர்வாகிகள் சொக்கலிங்ககுமார், உதயகுமார், பரணி இசக்கி, கவிபாண்டியன், மாரியம்மாள், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.