ஆன்மிகம்
இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து நிகழ்ச்சி
பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் ராப்பத்து நிகழ்ச்சி நடந்தது.
பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் ராப்பத்து நிகழ்ச்சி நடந்தது. காலை பெருந்தேவி தாயார் வரதராஜபெருமாள், லட்சுமிநரசிம்மர், ஆண்டாள் ஆகிய சன்னதிகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில் நம்மாழ்வார், வரதராஜபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து, அனைவருக்கும் நைவேத்திய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.