செய்திகள்
கைது

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

Published On 2021-09-07 21:29 GMT   |   Update On 2021-09-07 21:29 GMT
போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அகரம்கெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற போர்மேன் (வயது 32). இவா், கெங்காபுரம் பஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாஷை கைது செய்தனர்.
Tags:    

Similar News