செய்திகள்
போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அகரம்கெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற போர்மேன் (வயது 32). இவா், கெங்காபுரம் பஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாஷை கைது செய்தனர்.