செய்திகள்
தற்கொலை

கரூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-19 11:17 GMT   |   Update On 2021-11-19 11:17 GMT
கரூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் பசுபதிபாளையம் பகுதிக்குட்பட்ட அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 53), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News