செய்திகள்
குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம்- இழப்பீடு வழங்க உத்தரவு
செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மதுரை:
தஞ்சையில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கட்டை விரலை துண்டித்த அரசு செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தஞ்சையில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கட்டை விரலை துண்டித்த அரசு செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 75 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.
குழந்தையின் கட்டை விரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்வது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 26ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 26ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.