ஆன்மிகம்
வீரஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது
முத்தியால்பேட்டை எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
முத்தியால்பேட்டை எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அனுக்ஞை, புண்ணியாகவாசம், அங்குரார்பணம், வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, சாற்று முறை நடக்கிறது.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு விசேஷ ஹோமங்களும், அதனை தொடர்ந்து 3-ம் கால பூர்ணாகுதி, யாத்ரா தானம், தசதானம், கலச புறப்பாடு நடக்கிறது. பின்னர் காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு விசேஷ ஹோமங்களும், அதனை தொடர்ந்து 3-ம் கால பூர்ணாகுதி, யாத்ரா தானம், தசதானம், கலச புறப்பாடு நடக்கிறது. பின்னர் காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.