செய்திகள்
கொள்ளை

ராமநாதபுரத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண்களிடம் நகை திருட்டு

Published On 2021-11-18 11:27 GMT   |   Update On 2021-11-18 11:27 GMT
ராமநாதபுரத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண்களிடம் நகை திருடிய சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 62). இவர் ராமநாதபுரத்திற்கு பொருள்கள் வாங்கி விட்டு, ஊருக்கு செல்வதற்காக புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.

கூட்ட நெரிசலில் பின்புறம் கம்பியோரம் நின்று கொண்டு இருந்த போது 2 பெண்கள் நெருக்கடித்து கொண்டு நின்றனர்.

இவர்கள் பாரதி நகர் பஸ் நிறுத்தம் வந்தவுடன் அவசரமா இறங்கி சென்று விட்டனர். சிறிது தூரம் சென்றதும் ஜெயலட்சுமி தனது கழுத்தை பார்த்த போது அதில் இருந்த 6¾ பவுன் நகையை காணவில்லை.

இதே போல் முத்துப்பேட்டை தலைதோப்பு கிராமத்தைச் சேர்ந்த பானுமதி (54). இவர் ராமநாதபுரம் சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை யாரோ திருடி விட்டனர்.

மேற்கண்ட இரு சம்பவங்கள் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News