செய்திகள்
கோப்புபடம்

சாயல்குடி அருகே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-17 14:08 GMT   |   Update On 2020-09-17 14:08 GMT
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாயல்குடி மும்முனை சந்திப்பில் அனைத்து ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாயல்குடி:

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாயல்குடி மும்முனை சந்திப்பில் அனைத்து ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. நகர் தலைவர் சம்சுகனி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தங்கச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், ஜாபர் அலி, நகர செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் இக்பால், முனியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். சண்முகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News