செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி உயர்வு

Published On 2020-11-22 08:16 GMT   |   Update On 2020-11-22 08:16 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 10 ஆயிரத்து 138 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 9 ஆயிரத்து 478 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1000 கன அடியும், கால்வாயில் 700 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 96.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 97.30 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் உயர்ந்து 97.82 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News