உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி 100-வது நாள் விழா
திருத்துறைப்பூண்டியில் இல்லம் தேடி கல்வி 100-வது நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை, திருத்துறைப்பூண்டி தேசிங்குராஜபுரத்தை சேர்ந்த ரேவதி வேத கிருஷ்ணன் தொடர்சியாக 100 நாட்கள் நடத்தி சாதனை புரிந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் நூறாவது நாள் விழாவில் கோவி.வேதகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முனைவர் துரை ராயப்பன் நிறுவனத்தலைவர் ராய் டிரஸ்ட் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில்தேசிங்குராஜபுரம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வரதராஜன், கோவி. ரவி கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள்
கலைநிகழ்ச்சி நடத்தி திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்