செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறிப்பு
கள்ளக்குறிச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வள்ளி (வயது 52).
இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் வள்ளியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். வள்ளி நகையை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என்று அலறினார்.
இந்த சத்தம்கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதை பார்த்த மர்ம நபர்கள் வள்ளியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை வேகமாக இழுத்தனர். இதில் சங்கிலி அறுந்து ஒரு பகுதி வள்ளியின் கையிலும், மற்றொரு பகுதி மர்ம மனிதர்களிடம் சிக்கியது. அந்த நகையுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சின்ன சேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வள்ளி (வயது 52).
இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் வள்ளியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். வள்ளி நகையை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என்று அலறினார்.
இந்த சத்தம்கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதை பார்த்த மர்ம நபர்கள் வள்ளியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை வேகமாக இழுத்தனர். இதில் சங்கிலி அறுந்து ஒரு பகுதி வள்ளியின் கையிலும், மற்றொரு பகுதி மர்ம மனிதர்களிடம் சிக்கியது. அந்த நகையுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சின்ன சேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.