செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மகள் கீதா (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ளார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து வீட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கீதா பரிதாபமாக இறந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.