செய்திகள்
கைது

நல்லம்பள்ளி அருகே மது விற்ற முதியவர் கைது

Published On 2021-11-22 07:43 GMT   |   Update On 2021-11-22 07:43 GMT
நல்லம்பள்ளி அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது63). இவர் நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்றபோது ரோந்து சென்ற அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News