வழிபாடு
ஸ்ரீவைகுண்டம் அய்யா வைகுண்டர் நிழல்தாங்கலில் தை திருவிழா நிறைவு
ஸ்ரீவைகுண்டம் அய்யா வைகுண்டர் தை திருவிழாவின் நிறைவு நாளில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தனகுடம் எடுத்து நிழல்தாங்கலை வலம் வந்து அய்யாவுக்கு நேமித்தல் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டைவாசல் தெருவில் உள்ள அய்யா வைகுண்டர் நிழல்தாங்கலில் தை திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யாவுக்கு பணிவிடை, உகப்பெருக்கு, தர்மம், உச்சிப்படிப்பு போன்றவை நடந்தது.
விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலையில் அய்யாவுக்கு பணிவிடை, காலையில் உகப்பெருக்கு, பால்தர்மம், தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தனகுடம் எடுத்து நிழல்தாங்கலை வலம் வந்து அய்யாவுக்கு நேமித்தல் நடந்தது.மதியம் உச்சிப்படிப்பு, சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, உகப்பெருக்கு நிகழ்ச்சி, இரவில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலையில் அய்யாவுக்கு பணிவிடை, காலையில் உகப்பெருக்கு, பால்தர்மம், தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தனகுடம் எடுத்து நிழல்தாங்கலை வலம் வந்து அய்யாவுக்கு நேமித்தல் நடந்தது.மதியம் உச்சிப்படிப்பு, சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, உகப்பெருக்கு நிகழ்ச்சி, இரவில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.