ஆன்மிகம்
முருகன்

காவடிப்புரை முருகன் கோவிலில் மாசித்திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-02-16 05:23 GMT   |   Update On 2021-02-16 05:23 GMT
அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள காவடிப்புரை முருகன் கோவிலில் மாசி திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள காவடிப்புரை முருகன் கோவிலில் மாசி திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. முன்னதாக நாளை காலை பூஜையும், மாலை 5 மணிக்கு பஜனையும் நடக்கிறது.

2-ம் நாள் காலை 8 மணிக்கு காவடி அபிஷேகமும், 11 மணிக்கு காவடி ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பஜனையும் நடக்கிறது. 3-ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு காவடி ஏழு ஊர் சுற்றி ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும், பூஜையும் நடக்கிறது.

4-ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு காவடி அபிஷேகமும், காலை 11 மணிக்கு பஜனையும், நண்பகல் 12 மணிக்கு முருகனுக்கு சிறப்பு பூஜையும், மதியம் ஒரு மணிக்கு சமபந்தி விருந்தும், மாலை 5 மணிக்கு காவடி நடைபயணமாக திருச்செந்தூருக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News