செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வால் சத்தீஸ்கர் சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்த காங்கிரசார்

Published On 2018-09-12 23:48 GMT   |   Update On 2018-09-12 23:48 GMT
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர். #FuelPrice #Congress
ராய்ப்பூர்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடந்த 10ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்த சைக்கிள்களை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சட்டசபைக்குள் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் சட்டசபையை சிறிது ஒத்திவைத்தார். #FuelPrice #Congress
Tags:    

Similar News