ஆன்மிகம்
சந்தன மாரியம்மன்

முத்து லட்சுமிபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-09-06 03:08 GMT   |   Update On 2021-09-06 03:08 GMT
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள முத்து லட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள முத்து லட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் குடிஅழைப்பு பூஜை, அலங்கார பூஜை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மன் கும்பம் எடுத்து வீதியுலா வருதல், பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவில் வருதல், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.

இதேபோல், பாதகரை சுவாமி கொடை விழாவிலும் குடிஅழைப்பு பூஜை, சிறப்பு பூஜை, படைப்பு தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News