சீர்காழி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு
சீர்காழி:
சீர்காழி அருகே தென்பாதி அகர திருக்கோலக்கா, கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கரிகாலன் (வயது 34 ). இவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமன் (27) ,லட்சுமண் (27) மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனராம். இதனைப் பார்த்த கரிகாலன் அவர்களிடம் இங்கு ஏன் விளையாடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டாராம் . அதன் பின்னர் கரிகாலன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் மீண்டும் மாலை கரிகாலன் சென்றுகொண்டிருந்தபோது மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இரும்பு பைப், அரிவாளால் கரிகாலனை தலை, உடம்பில் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த கரிகாலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப் -இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதேனூர் பகுதியை சேர்ந்த கோபிநாதன் (19) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற ராமன், லெட்சுமனனை தேடி வருகின்றனர்.