ஆட்டோமொபைல்
அர்பன் குரூயிசர் மாடல்களை ரீகால் செய்யும் டொயோட்டா
டொயோட்டா நிறுவனத்தின் சப்-4 மீட்டர் எஸ்.யு.வி.-யான அர்பன் குரூயிசர் மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது சப்-4 மீட்டர் எஸ்.யு.வி.-யான அர்பன் குரூயிசர் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. ஜூலை 28, 2020 முதல் பிப்ரவரி 11, 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 9,498 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.
ஓட்டுனர் இருக்கையுடன் வரும் ஏர்பேக் மாட்யூலில் கோளாறு இருக்கலாம் என்ற காரணத்தால் கார்கள் திரும்ப பெறப்படுவதாக டொயோட்டா இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த பாதிப்பு கொண்ட வாகன உரிமையாளர்களை டொயோட்டா தொடர்பு கொண்டு வாகனத்தை இலவசமாக சரி செய்து வழங்கும்.
அர்பன் குரூயிசர் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் முன்புறம் இரட்டை ஏர் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.