செய்திகள்
யோகன் பிளேக்

ஆர்சிபி அல்லது கேகேஆர் அணிக்காக விளையாட ஆசை: ஒட்டப்பந்தய ஜாம்பவான் பிளேக் சொல்கிறார்

Published On 2019-12-04 09:52 GMT   |   Update On 2019-12-04 09:52 GMT
உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான யோகன் பிளேக், ஐபிஎல் டி20 லீக்கில் விளையாட ஆசை என்று தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரராக திகழ்ந்தவர் உசைன் போல்ட். 8 ஒலிம்பிக் பதக்கம் வென்ற போல்ட், ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் கால்பந்து போட்டியில் விளையாட விரும்பினார்.

இதற்காக புருஸ்சியா டார்ட்மண்ட் அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். அதன்பின் ஆஸ்திரேலியா கால்பந்து கிளப் அணியான சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் (Central Coast Mariners) அணிக்காக விளையாடினார்.

மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான யோகன் பிளேக், டோக்கியோ ஒலிம்பிக் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

யோகன் பிளேக் சாலை பாதுகாப்பு உலகத் தொடர் டி20 லீக்கை பிரபலம் படுத்துவதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வந்தார்.

உசைன் போல்டுக்கு கால்பந்து மீது ஆர்வம் இருந்ததுபோல், யோகன் பிளேக்கிற்கு கிரிக்கெட் மீது ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யோகன் பிளேக் கூறுகையில் ‘‘நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வேன். அதன்பின் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவேன். ஆனால் வெஸ்ட் இண்டீஸில் விளையாட விரும்பவில்லை.

நான் டி20 லீக்கில் விளையாட விரும்புவேன். இது இந்தியாவில் உள்ள அணியாக இருக்கும். அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியாக இருக்கலாம்.

கிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் விளையாடி உள்ளார். எனக்கு பெங்களூர் அணி பிடிக்கும். குறிப்பாக அந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸும் பிடிக்கும். மேலும், கொல்கத்தா அணியும் பிடிக்கும். ஏனென்றால், கிறிஸ் கெய்ல் அந்த அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

கரிபீயன் பிரிமீயர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி என்னை அணுகியது. ஆனால் நான் முடியாது என்று தெரிவித்துள்ளேன். அப்போது நான் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்காக பயிற்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.’’ என்றார்.
Tags:    

Similar News