செய்திகள்
குடிப்பதைக் கண்டித்த மனைவியை பூரிகட்டையால் தாக்கிய கணவர் கைது
கோவையில் குடிப்பதை கண்டித்த மனைவியை பூரிகட்டையால் தாக்கிய கணவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை கரும்புக்கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன்(50). இவரது மனைவி தாஜூநிஷா(45). பூ வியாபாரம் செய்து வரும் காஜாஉசேனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காஜா உசேன் குடிபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில் அவரை தாஜூநிஷா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த காஜா உசேன் அங்கிருந்த பூரி கட்டையை எடுத்து மனைவியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் தாஜூநிஷாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தாஜூநிஷா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் காஜா உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கரும்புக்கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன்(50). இவரது மனைவி தாஜூநிஷா(45). பூ வியாபாரம் செய்து வரும் காஜாஉசேனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காஜா உசேன் குடிபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில் அவரை தாஜூநிஷா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த காஜா உசேன் அங்கிருந்த பூரி கட்டையை எடுத்து மனைவியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் தாஜூநிஷாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தாஜூநிஷா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் காஜா உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.